அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தன; அதிமுக மட்டுமே ஆதரித்தது. சி.ஏ.ஏ. சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக பதில் சொல்ல வேண்டும். பா.ஜ.க. வேட்பாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடாமல் விலகி வருகின்றனர். தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பும் விதமாக சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். சி.ஏ.ஏ. சட்டத்தில் இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை என தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். மோடி ஆட்சி தமிழர்களுக்கு எதிரான ஆட்சியா?. இலங்கை தமிழர்களுக்கு ஓரவஞ்சனை காட்டுகிறது ஒன்றிய பாஜக அரசு,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்தி பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதி? தமிழ் பேசும் இந்துக்களுக்கு ஒரு நீதியா? :செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.