அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. காவல்துறையினரை தாக்கி விரட்டிய விவசாயிகள், அவர்களின் வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் நிலவியது. அருகில் இருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வாகனங்களை கற்களை வீசி சேதப்படுத்தினர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த கலவர தடுப்பு காவல்துறையினர், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஹாவேரி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளை பிடித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், ஹாவேரியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post மிளகாய் விலை வீழ்ச்சி… கலவரமாக மாறிய விவசாயிகள் போராட்டம்: அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு!! appeared first on Dinakaran.