நிலக்கோட்டை மணியக்காரன்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் திறப்பு: சொந்த செலவில் அமைத்து கொடுத்த  திமுக கவுன்சிலருக்கு பாராட்டு

 

நிலக்கோட்டை, மார்ச் 12: நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு மணியக்காரன்பட்டி திமுக கவுன்சிலரும், பேரூராட்சி துணை தலைவருமான எஸ்பி முருகேசன், கடந்த தேர்தலின் போது கிராமமக்கள் பயன்பாட்டிற்காக புதிய சமுதாய கூடம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி அவர் கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊரிலுள்ள உக்ரகாளியம்மன், முத்தாலம்மன் கோயில் அருகே தனது சொந்த நிதியான ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மினி சமுதாய கூடத்தை கட்டி தந்தார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய கூடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணை தலைவரும், 10வது வார்டு கவுன்சிலருமான எஸ்பி.முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் நெடுமாறன், கவுன்சிலர்கள் காளிமுத்து, சிலம்புசெல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி சமுதாய கூடம் அமைத்து தந்த வார்டு கவுன்சிலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post நிலக்கோட்டை மணியக்காரன்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் திறப்பு: சொந்த செலவில் அமைத்து கொடுத்த  திமுக கவுன்சிலருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: