இடுப்பின் இடதுபுறம் வாளின் மறு பகுதியும், இடது புறம் சாட்டை வடிவில் சுருள் கத்தியும் இடம்பெற்றுள்ளன. இது போர் செயல்பாடுகளை குறிக்கும். நடுகல்லின் முகம் முழுமையாக சிதைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இதனை வீரன் கல் என்று அழைக்கின்றனர். மேலும் நம் பழமைச் சங்க இலக்கியமான புறநானூற்றில் நடுகல்லில் நந்தா விளக்கு வைத்து வழிபாடு நடத்தப்படுவதாக குறிப்பு உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தும் வகையில் சிறு நந்தா விளக்குத்தூணும் அருகில் வைக்கப்பட்டுள்ளது. எழுத்துகள் ஏதும் காணப்படவிலலை என்றாலும், இது 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததது என கருத்தில் கொள்ளலாம்’’ என்றார்.
The post மதுரை அருகே போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.