நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை!

சென்னை: நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது. போக்குவரத்துத்துறைக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 1190 மாநகர பேருந்துகள், 672 மாநகர தாழ்தள பேருந்து, 1,138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3000 பேருந்துகள் கொள்முதல். நடைமுறையில் உள்ள காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக அடுத்த நிதியாண்டில் புதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.

 

The post நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை! appeared first on Dinakaran.

Related Stories: