அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியன்று, இந்திய நாட்டை சார்ந்த குடிமகன் வாழ்த்து தெரிவித்தால் அதில் எந்த தவறும் கிடையாது. அது ஒரு நல்லெண்ணத்தின் அடையாளம். இதில் மனுதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவரது நோக்கங்களை நாட்டுக்கு எதிராக சித்தரிக்கக் கூடாது. குறிப்பாக 370வது சட்டப்பிரிவு மட்டுமில்லாமல், அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு. அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடித்த மகாராஷ்டிரா காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தை தெரிவிக்கிறது’’ என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் மீது மகாராஷ்டிரா காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post அரசின் செயல்களை விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.