ரஸ்தா தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

நெல்லை, மார்ச் 8:மானூர் ஒன்றியம் ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் வட்டார கல்வி அலுவலர் ஆண்டாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை சுஜாதா, ஆசிரியை மேரிஞானஜோதி, ராதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், பெற்றோர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ரஸ்தா தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி appeared first on Dinakaran.

Related Stories: