செங்கல்பட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு அவகாசம் கேட்கும் எஸ்.பி.ஐ வங்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் சுந்தரமூரத்தி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கருப்புக் கொடி ஏந்தி 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு நகரத் தலைவர் பாஸ்கர், மறைமலைநகர் நகரத் தலைவர் தனசேகர், பழவேலி ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட், மாநில பொதுக்குழு தலைவர் ஜாவித், மதுராந்தகம் வடக்கு வட்டார தலைவர் சத்தியநாராயணன், மாவட்ட மகளிரணி தலைவி வேல்விழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: