இதனால், அவர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற முதல் விழிப்புணர்வு கூட்டத்தில் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தீபக் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தை கடத்தல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அது குறித்த தகவல்களை யாருக்கும் அனுப்பவோ பரப்பவோ கூடாது என்றும் கூறினர். யாரேனும் வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.
The post குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல் உதவி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.