இந்த விசாரணையில் கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்தது நாகர்கோவில் வடசேரி ஓட்டுபிரைதெருவை சேர்ந்த விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முக்கிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய வடசேரி மரிச்சினிவிளை, வாத்தியார்விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 இளம் சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தோட்டியோடு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது : வாகன சோதனையில் சிக்கினார் appeared first on Dinakaran.