எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

விருதுநகர், மார்ச் 7: விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள், காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா மனுக்கள் மீது நேரடி விசாரணை நடத்தினார். பொதுமக்களிடம் பெறப்பட்ட 12 புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களிடமிருந்து பெறப்பட்ட 33 மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள எஸ்.பி. அறிவுறுத்தினார்.

The post எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: