ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் வீடு வீடாக திமுகவினர் வழங்கினர்

உடுமலை, மார்ச்7: மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ துண்டு பிரசுரங்களை ஒன்றிய திமுக செயலாளர் சாகுல்அமீது தலைமையில் வீடு வீடாகச் சென்று திமுகவினர் வழங்கினர். நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய தொழில்நுட்ப நிர்வாகி மோகன், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் பெரிய கோட்டை ஊராட்சி சிவசக்தி காலனி, சங்கர் நகர்,வேலவன் நகர்,அய்யலூர் மீனாட்சி நகர் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று ‘இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’ துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் நகர மன்ற தலைவர் மத்தீன் மற்றும் திமுக ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

The post ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் வீடு வீடாக திமுகவினர் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: