மாற்று திறன் குழந்தைகளுக்கான ஏதுவான சுழலை ஏற்படுத்துதல் நிகழ்ச்சி

குளித்தலை, மார்ச் 7: குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறன்கொண்ட மாணவர்களுக்கான ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராகுகாலம் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாட்டை ஐ.இ ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

பள்ளி ஆசிரியர்கள், எஸ் .எம் .சி பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் நித்யா, கிருபா, சாந்தி, அனிதா, கிருஷ்ணவேணி, திவ்யா, இயன்முறை மருத்துவர் செல்வ குமாரி, பகல்நேர காப்பக மைய காப்பாளர் பிரவினா மற்றும் உதவியாளர் பர்வின், அனைத்து பள்ளியில் இருந்து மாற்றுதிறன் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்றல், சைகை மொழி கற்பித்தல், படங்களை ஒருங்கிணைத்தல், பலூன் விளையாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. முடிவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post மாற்று திறன் குழந்தைகளுக்கான ஏதுவான சுழலை ஏற்படுத்துதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: