நீங்கள் நலமா திட்டத்தில் கலெக்டர் பேச்சு கரூர் காந்தி கிராமத்தில் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி

கரூர், மார்ச் 7: கரூர் காந்தி கிராமத்தில் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானமே காந்திகிராமம் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மாணவர்களுக்கும் ஒரு விளையாட்டு மைதானமாக திகழ்கிறது.

இந்நிலையில் இந்த மைதானம் குண்டு குழியுமாக சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் இதில் விளையாடும் மாணவர்களும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் இந்த விளையாட்டு மைதானத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கி மைதானத்தை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிந்தபின் பொதுமக்கள் வழக்கம்போல் விளையாடுவதற்கு இது வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குளித்தலையில்

The post நீங்கள் நலமா திட்டத்தில் கலெக்டர் பேச்சு கரூர் காந்தி கிராமத்தில் விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: