மேலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாது. அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டு, அவர் கவனித்து வந்த உயர்கல்வி துறை இலாகா, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அவர் வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக நேற்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அப்படி அறிவிக்கும்பட்சத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.
The post பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானது: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்; நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும்? appeared first on Dinakaran.