இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்ணும் அவரது காதலனும் குழந்தையை தாங்கள்தான் அங்கு போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறி, முன்ஜாமீனுடன் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து விசாரிக்குமாறு பூந்தமல்லி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது இறந்துபோன குழந்தையின் டிஎன்ஏவை பரிசோதனை செய்த பிறகு, நீதிமன்றத்தில் சரணடைந்த காதல் ஜோடியின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது முடிவு செய்யப்படும். அதன் பிறகு அந்த காதல் ஜோடியின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என பூந்தமல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு: காதல் ஜோடியிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.