வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ.3.22 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

 

திருப்பூர், மார்ச் 6: திருப்பூர் மாநகராட்சியில் 9-வது வார்டில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து, ஒன்றிய பாஜ அரசின் அநீதிகள், தி.மு.க. அரசின் சாதனைகள், தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்படி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் திருப்பூர் வடக்கு மாநகரம் 15 வேலம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 9-வது வார்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் 9-வது வட்ட திமுக செயலாளர் ஸ்ரீதர், ஆனஸ்ட் ராஜ், சசிகுமார், மைக்கேல்ராஜ், கனகராஜ் ,ஜெரோம் ராஜ் ,சீனிவாசன், முன்னா, மாரிமுத்து, பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ.3.22 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: