கும்மிடிப்பூண்டி பஜாரில் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோடியை கண்டித்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டமும், திருவள்ளூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நிதி வழங்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

வட்டக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சீனு, லோகநாதன், சிவகுமார், ஜோசப், ரஹீமா, முகமது சாலி, காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், துளசி நாராயணன், சம்பத், விஜயன், கண்ணன், சந்தானம், பெருமாள் மோகனா, தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், நம்புராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் கோபால் ஆகியோர் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேசினர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார்.

இதில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ரூ.9 லட்சம் நிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சவுந்தரராஜனிடம் வழங்கப்பட்டது. முன்னதாக கட்சி மூத்த நிர்வாகி சங்கரய்யாவிற்கு அஞ்சலியும், அவர் நினைவாக 100 அடி நீளத்திற்கு பேனரும் வைக்கப்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி பஜாரில் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: