போதைப்பொருள் வழக்குகளில் 80%-க்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு. போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 16 பேரை கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது பாஜக. போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள குஜராத்தில் முதலில் போதைப்பொருளை பாஜக தடுக்கட்டும். தேர்தலின்போது எய்ம்ஸ் வரும், தேர்தல் முடிந்தபிறகு எய்ம்ஸ் போய்விடும். தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. குற்றப் பின்னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர், போதைப்பொருள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது. ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : அமைச்சர் ரகுபதி தாக்கு!! appeared first on Dinakaran.