சென்னை : பழனி கிரிவல பாதையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி கிரிவல வீதியில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிட வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.