ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூடம் எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை

உசிலம்பட்டி, மார்ச் 2: உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது பொட்டல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க முடிவானது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், போத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் சௌந்தரபாண்டி, ராஜா, விஜயகுமார் மற்றும் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.

The post ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூடம் எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை appeared first on Dinakaran.

Related Stories: