விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க வேண்டும் தேர்வர்கள் கோரிக்கை

பழநி, மார்ச் 2: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. தற்போது சில இடங்களில் தமிழ் வழிச்சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தேர்வர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே, தேர்விற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மேலும் 1 வாரம் நீடித்துத் தர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், தமிழ்நாடு முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க வேண்டும் தேர்வர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: