மக்களவை தேர்தல் : தொகுதி பங்கீடு தொடர்பாக சிபிஎம், மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை!!

சென்னை : மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க.வுக்கு ஏற்கனவே தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

The post மக்களவை தேர்தல் : தொகுதி பங்கீடு தொடர்பாக சிபிஎம், மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.

Related Stories: