நாகூர் ரயில் நிலையம் மேம்படுத்த வேண்டும் எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம், பிப்.29: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் நடந்தது. இதில் 21 மனுக்களை எஸ்பி பெற்று விசாரணை மேற்கொண்டார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறும். பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

அல்லது உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள் என்ற செல்போன் எண் 8428103090 மூலம் கள்ள சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். எனவே அச்சம் இன்றி புகார் தெரிவிக்கலாம் என்றார்.

The post நாகூர் ரயில் நிலையம் மேம்படுத்த வேண்டும் எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: