மனித உரிமைகள் குழ நினைவகத்தின் இணைத்தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மனித உரிமை ஆர்வலர் ஒலெக் ஓர்லோவ் (70). இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ரஷ்ய ராணுவம் குறித்தும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில் ரஷ்ய ராணுவத்தை இழிவுப்படுத்தி எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ஒலெக் ஓர்லோவ்வுக்கு 30 மாத சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
The post நோபல் பரிசு வென்ற மனித உரிமை ஆர்வலருக்கு சிறை தண்டனை: மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.