அதன்பேரில், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் யுகேந்தர், வருவாய் ஆய்வாளர் ஜெயசுதா, அடையாளப்பட்டு ஊராட்சி அலுவலர் கிரி முன்னிலையில் வருவாய்த்துறையினர் நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பொக்லைன இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து, ₹53 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை மீட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, மதுரவாயல் காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி, ஆய்வாளர் பூபதிராஜா தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி செல்வன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றம் ₹53 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.