கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை: கிராமப்புற மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் கேஆர்.பெரியருப்பன் பேசினார். சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நகராட்சி நிர்வாகத்திடம் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி காட்டுக்குடியிருப்பு பகுதியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 1 லட்சத்து 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கன் சிறப்பாக செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பல்வேறு நிதியின் கீழ் வளர்ச்சி பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம் முதல்வர் தலமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் ஒவ்வொரு துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

 

The post கிராம மக்கள் முன்னேற ஏராளமான திட்டங்கள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: