அப்போது அரவக்குறிச்சி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ராமர் பாண்டியனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ராமர் பாண்டியன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் இவரது உடலை நேற்று கரூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை அனுப்பானடிக்கு கொண்டு வந்து மயானத்தில் உடலை தகனம் செய்தனர். முன்னதாக ஊர்வலம் வரும்போது, சில இளைஞர்கள் அவ்வழியாக வந்த 6 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர். இதுதொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
The post கொலை செய்யப்பட்ட ராமர்பாண்டியன் உடல் தகனம்: ஊர்வலத்தில் 6 பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.