அந்தியூர் அருகே விபத்து மொபட்-கார் மோதி தம்பதி பரிதாப பலி

அந்தியூர் : அந்தியூர் அருகே மொபட்-கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்படாபாளையம், கொண்டையன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவரது மனைவி ராஜம்மாள் (65). இவர்கள் வீட்டிலிருந்து இருந்து நேற்று மதியம் மொபட்டில் அந்தியூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

பட்லூர் நால் ரோடு என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த காரும், மொபட்டும் மோதின. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜம்மாள் உயிரிழந்தார். ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post அந்தியூர் அருகே விபத்து மொபட்-கார் மோதி தம்பதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: