* கடந்த 2018-19 முதல் 2022-23 நிதியாண்டு வரை பாஜவுக்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈடி, ஐடி, சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது.
* இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பாஜவுக்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன.
* இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பாஜவுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை.
* ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பாஜவுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரு.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பாஜவுக்கு வாரி வழங்கி உள்ளன.
* 4 கம்பெனிகள் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பாஜவுக்கு நிதி தந்துள்ளன.
* பாஜவுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு அடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பாஜவுக்கு கொடுத்துள்ளன.
* தொடர்ந்து பல ஆண்டுகளாக பாஜவுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
* இப்படி 6 நிறுவனங்களை ஈடி, ஐடி, சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
* பாஜவுக்கு நிதி தந்த 32 நிறுவனங்களில் 3 மட்டுமே காங்கிரசுக்கும் நிதி தந்துள்ளன.
* ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பாஜவுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது.
* நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் நிதி தந்த நிறுவனங்கள் பற்றி மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஈடி, ஐ.டி, சி.பிஐயை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி மிரட்டி பாஜவுக்கு தேர்தல் நிதி குவித்த விவகாரம் அம்பலமானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: சர்வாதிகார மோடி அரசு மிரட்டல், நிதி தீவிரவாதம் மூலம் ஜனநாயகத்தை கைப்பற்ற முயற்சித்தது தற்போது நிரூபணமாகி உள்ளது. சி.பி.ஐ, ஈடி, ஐ.டி துறைகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்றது அம்பலமாகிவிட்டது. ரெய்டில் சிக்கிய நிறுவனங்கள் சில மாதங்களிலேயே பாஜவுக்கு நிதியை கொட்டிக் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் பணத்தை கொள்ளையடித்த பிரதமர் மோடி மறுபுறம் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தி பாஜ கஜானாவை நிரப்பியுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதை எதிர்த்து போராடுவோம்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: விசாரணை- கட்சி நிதி. இதுதான் தொழில் நிறுவனங்களை மிரட்ட மோடி, அமித் ஷா கண்டுபிடித்த மாடல். தேர்தல் பத்திரங்கள் திரட்ட விவரங்களை ஏன் ரகசியமாக வைத்தார்கள் என்பது இப்போது தெரிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்களை வழங்கியோர் விவரங்கள் வெளியாகும்போது இன்னும் பல ஆதாரங்கள் வெளிவரும்.
The post 30 நிறுவனங்களில் ரெய்டு நடத்தி ரூ.335 கோடி தேர்தல் நிதி வசூலித்த பாஜ: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.