கடந்த ஆண்டு மே முதல் அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது. சுமார் 200 உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் மெய்தி இனத்தவரை பட்டியலினத்தில் சேர்ககும் உத்தரவை மணிப்பூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கோல்மெய் காய்புல்ஷில்லுவின் ஒற்றை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வின் நிலைபாட்டுடன் முரண்படுவதால் கடந்த ஆண்டு மார்ச் தீர்ப்பில் இருந்த குறிப்பிட்ட பத்தியை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்ட சர்ச்சை உத்தரவை நீக்கியது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.