ஆக்கிரமிப்பை அகற்றியதில் தலையிட உயர்நீதிமன்ற மதுரைகிளை மறுப்பு

புதுக்கோட்டை: தொட்டியம்பட்டியில் மயானம் என வகைப்படுத்தபட்ட இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியதில் தலையிட உயர்நீதிமன்ற மதுரைகிளை மறுத்துவிட்டது. தொட்டியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த தங்கப்பன் என்பவர் தான் வசித்து வந்த இடம் மயானம் என வகைமாற்றம் செய்யபட்டது. 2022-ல் நடந்த சமாதான கூட்டத்தில் மாற்று இடம் தருவதாக வட்டாட்சியரால் உறுதியளிக்கப்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மயானம் என வகைப்படுத்தபட்ட இடம் அருகே கபர்ஸ்தன் என வகை மாற்றம் செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

The post ஆக்கிரமிப்பை அகற்றியதில் தலையிட உயர்நீதிமன்ற மதுரைகிளை மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: