மாடுபிடி வீரர்களுக்கு மணிகண்டம் வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக நின்று விளையாடியது. களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
The post திருச்சி நாகமங்கலத்தில் ஜல்லிக்கட்டு 700 காளைகள் அதகளம் 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.