சமண துறவி வித்யாசாகர் மகராஜ் மறைவு

ராஜ்நந்த்கான்: புகழ் பெற்ற சமண சமய குரு வித்யாசாகர் மகராஜ்(77) நேற்று காலமானார். கர்நாடகாவில் பிறந்த ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ் சிறு வயது முதலே ஆன்மீக வாழ்க்கையை தழுவி வாழ்ந்து வந்தார். சட்டீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் கடந்த 6 மாதங்களாக தரிசனத்துக்காக தங்கி இருந்த அவர், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து சந்திரகிரி தீர்த்தத்துக்கு சென்று சமண சமய முறைப்படி கடந்த 3 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம், மவுன விரதம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சந்திரகிரி தீர்த்தத்தில் நேற்று அதிகாலை 2.35 மணிக்கு சமாதி நிலை அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post சமண துறவி வித்யாசாகர் மகராஜ் மறைவு appeared first on Dinakaran.

Related Stories: