விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் ஆர்ஆர்.நகர் அருகே ஓ.கோவில்பட்டியில் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சுந்தரலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலையில் பட்டாசு தயாரிப்பு நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை ஆலையில் திடீரென வெடிகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த 3 அறைகள் தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

வெப்ப மாற்றம் காரணமாக பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் உயிர் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் நேற்றும் பட்டாசு ஆலை விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: