பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி!!

சென்னை : பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் பேச்சுக்கு வந்தால் நாங்கள் பேச்சு நடத்துவோம் என பிரேமலதா கூறியிருந்தார்.பிரேமலதா அறிவித்து ஒரு வாரமாகியும் தேமுதிகவுடன் பேச்சு நடத்த அதிமுக ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, கடைசிவரை தேமுதிகவை கூட்டணிக்கு சேர்க்கவில்லை. மாவட்ட செயலாளர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

The post பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி!! appeared first on Dinakaran.

Related Stories: