இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். பிப்ரவரி 20ம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்தது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.