புகார் அடிப்படையில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தீவைத்த நபரை பாரிமுனையில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைதானவர் அனகாப்புத்தூர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சம்பவத்தின்போது அவர் கோயிலை சுற்றி வந்ததாகவும், அங்குள்ள செருப்புகளை சேகரித்து தீ வைத்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்தவர் கைது appeared first on Dinakaran.