நாகர்கோவிலில் 2 பைக்குகள் மோதி பிளம்பர் பலி

நாகர்கோவில், பிப்.13: நாகர்கோவில் கீழ ராமன்புதூர் தட்டான்விளை பகுதி சேர்ந்தவர் சுதர்சன் (52). பிளம்பர். நேற்று முன் தினம் இரவு சுமார் 10.30 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருடன் பைக்கில் ராணித்தோட்டம் டெப்போ அருகே சென்று கொண்டிருந்தார். சுதர்சன் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் சுதர்சன் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுதர்சன் இறந்தார். ராஜனும் படுகாயம் அடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த நவாஸ் (39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post நாகர்கோவிலில் 2 பைக்குகள் மோதி பிளம்பர் பலி appeared first on Dinakaran.

Related Stories: