கடந்த 10ம் தேதி ஆகாஷ் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் போதைக்காக போதை காளானை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி திடீரென இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் ஆகாஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கடந்த 10ம் தேதி பாம்பே கேசில் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு இருவரும் ஆகாஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவரும் மது அருந்தி விட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வாலிபர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் சாப்பிட்டுள்ளனர். போதை தலைக்கேறி இருவரும் படுத்துள்ளனர். இதில், அந்த பெண் மூச்சுத்திணறி இறந்துள்ளார். நாங்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். அங்கு சோதனையிட்டதில் மதுபாட்டில்கள் மற்றும் போதை காளான் இருந்தது தெரிய வந்தது. எனவே வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
The post மதுஅருந்தி உல்லாசமாக இருந்தபோது காதலனுடன் போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி appeared first on Dinakaran.