அந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமான அஸ்திவார பணியின்போது சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் பெரும்பாலாக மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்புகள் இருப்பதனால் கட்டுமான பணிகளின் ஒலியால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமான வழக்கில் தடை நீட்டிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க நடைமுறை உள்ளதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திட்ட அனுமதியின்றி கட்டுமான பணிகளுக்கு எப்படி அனுமதி தரப்பட்டது என்று சிஎம்டிஏ-வுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை கட்டுமானத்திற்கான தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.