சங்கரன்கோவில் பள்ளியில் பொது தேர்வுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை

 

சங்கரன்கோவில்,பிப்.12: சங்கரன்கோவில் நகர்புற மின்வாரிய உபகோட்டத்தில் சங்கரன்கோவில் நகர்-1 பிரிவுக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க இருப்பதால் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் பொருட்டு, சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் கோமதி அம்பாள் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் மின்இணைப்பு வயர்கள் மறு சீரமைப்பு, கட்அவுட் எரியிழை மறுசீரமைப்பு பணிகள், மின்சார அவசரகால அழைப்பு தொலைபேசி எண்கள், விபரப்பட்டியல் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த பணிகளை உதவி மின்பொறியாளர் கருப்பசாமி, சிறப்புநிலை முகவர் தங்கமாரிமுத்து, முகவர் முதல்நிலை பொன்சுப்புராஜா, மின்பாதை ஆய்வாளர்கள் அரிராஜ் ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் கம்பியாளர்கள் பேச்சிமுத்து, முருகன், ஆறுமுகம், செல்லச்சாமி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் செய்தனர்.

 

The post சங்கரன்கோவில் பள்ளியில் பொது தேர்வுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: