பாஜவும், சங்பரிவாரும் ஏழைகளுக்கான எந்தத் திட்டங்களையும் எதிர்ப்பதுதான் வழக்கமாகும். இதுதான் வரலாறு. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிப்போம் என்று கூறியபோதும், அதே ஆர்எஸ்எஸ்-பாஜ அதை எதிர்த்தது. நிலச் சீர்திருத்தம், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதித் திட்டங்களையும் எதிர்த்தனர். பாஜவினரின் இந்த செயலுக்கு ஏழை எளிய மக்கள், மக்களவை தேர்தலில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது, நான் அறிமுகப்படுத்திய அன்ன பாக்யா, க்ஷீர பாக்யா, இந்திரா கேன்டீன் போன்ற ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மீது பாஜ தலைவர்கள் சகிப்புத்தன்மையின்மையையும் பொறாமையையும் காட்டினர். அன்ன பாக்யா திட்டத்திற்கு தேவையான அரிசியை வழங்க மறுத்த ஒன்றிய அரசு, தற்போது அதே அரிசியை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. காங்கிரசின் உத்தரவாதத் திட்டங்களுக்கு எதிராகப் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னடர்கள் மீது வெறுப்பாக இருக்கிறார். கன்னட கொடிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு முயற்சி, நந்தினியை விட அமுலுக்கு ஆதரவாக சதி செய்தல் இவையெல்லாம் அமித்ஷாவின் சாதனைகள் ஆகும் என்றார்.
The post கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டங்களை காப்பி அடித்த மோடி: சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.