பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு

விருதுநகர், பிப். 11: விருதுநகர் தாமரை நகரில் உள்ள பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திறந்து வைத்தார்.விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் வரவேற்றுப் பேசினார். கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன்.பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர்.

இராம சீனிவாசன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள்,மாநில செயற்குழு உறுப்பினர்கள், வெற்றிவேல் கஜேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை, மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விருதுநகர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செல்வக்குமார், மதுரை மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கேலோ 2024 போட்டியில் தங்கம் வென்ற விருதுநகரைச் சேர்ந்த மேனகாவிற்கு எச்.ராஜா தங்க மங்கை விருது வழங்கி கவுரவித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சீதாராமன் தொகுத்து வழங்கினார். திறப்பு விழாவுக்கு பின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைக்கான மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் ஜேபி மஹாலில் நடைபெற்றது. இதில் எச்.ராஜா, முன்னாள் எம்.பி.க்கள் ராமலிங்கம், கார்வேந்தன் மற்றும் இராம சீனிவாசன், பென்டகன் பாண்டுரங்கன் முன்னிலையில் வணிகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் பல்வேறு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை கூறினர்.

The post பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: