தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிராகவே உள்ளன. தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே இபிஎஸ்சும் தற்போது எடுத்துள்ளார். தன்னிச்சையாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று யார் பிரதமராக வருவார்? என்பதை அதிமுக தான் நிர்ணயம் செய்யும். பாஜவிற்கும், அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓபிஎஸ் கேட்கவில்லை. ஒருவேளை அண்ணாவையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் விமர்சித்ததை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்கிறாரா? அதிமுக கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். நாங்கள் தற்போதுதான் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அதிமுக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட தயாரா? அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது; சாட்டையை சுழற்றும் கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.