சென்னை : மயிலாப்பூர் தொகுதியில் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான பயன்பாட்டுக்காக இடத்தை வாங்கி அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அறநிலையத்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாவட்ட இணைய ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.