பெரியார் பல்கலை. பதிவாளரை உடனே சஸ்பெண்ட் செய்க: ஆசிரியர் சங்கம்
துணைவேந்தர், பதிவாளர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளரின் நடவடிக்கைகள் எதுவுமே சரியானதாக இல்லை. பல்கலைக்கழக பதிவாளர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் அபாயகரமானது என ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக பல்கலை. ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலுக்குள் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பரிந்துரை செய்தும் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் மறுப்பு
யாரும் செய்யாத முறைகேடுகளை பதிவாளர் செய்ததாக உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் மீதும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்..!! appeared first on Dinakaran.