ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

உசிலம்பட்டி, பிப். 9: தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (பிப்.9) துவங்க உள்ளது. உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் பிப்.12ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி இன்று (பிப்.9) காலை 10 மணிக்கு துவங்குகிறது. இதன்படி நாளை காலை 10 மணிவரை பெயர்களை https://madurai.nic.in என்ற இணையதள முகவரியின் பதிவு செய்யலாம் என உசிலம்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவு இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: