தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, 2024ல் உலக பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தக பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024இல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது. தற்போது பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது, இந்தாண்டு நிலையாக இருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உயர்ந்துள்ள பொதுக் கடன்கள், சில மேம்பட்ட பொருளாதாரங்கள் உட்பட பல நாடுகளில் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து கவலை எழுந்துள்ளது. அதன்படி, இந்தாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொதுக் கடன் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளைக் குறைப்பது அவசியம் எனவும் ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.
The post வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! 6.5 சதவீதமாக நீடிக்கிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.