பிப்.24,25ல் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள்: தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் இந்தியா கூட்டணி

டெல்லி: பிப்.25க்கு முன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய “இந்தியா” கூட்டணி திட்டமிட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மிக விரைவில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் நிதிஷ் குமார் சமீபத்தில் விலகி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பிப்.25க்கு முன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய “இந்தியா” கூட்டணி திட்டமிட்டுள்ளது. பிப். 24,25ம் தேதிகளில் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மும்பையில் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு என கூறப்படுகிறது.

The post பிப்.24,25ல் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள்: தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் இந்தியா கூட்டணி appeared first on Dinakaran.

Related Stories: